“கடனாளியாகி விட்டேன்” - விருதுகளை குவித்த ‘ஜோரம்’ பட இயக்குநர் வேதனைப் பகிர்வு https://ift.tt/wsieT6F

மும்பை: மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘ஜோரம்’ படத்தை இயக்கிய தேவஷிஷ் மகிஜா, தான் இயக்கிய எந்த படத்தின் மூலமும் தனக்கு பணம் கிடைத்ததில்லை என்றும் தற்போது தான் கடனாளியாகி விட்டதாகவும் வேதனையோடு தெரிவித்துள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு தேவஷிஷ் மகிஜா இயக்கத்தில் மனோஜ் பாஜ்பாய் நடித்த படம் ‘ஜோரம்’. மலைவாழ் மக்கள் படும் இன்னல்களை மிக இயல்பாக பேசிய இப்படம் விமர்சன ரீதியாக பலராலும் பாராட்டப்பட்டது. மேலும் சிறந்த படம் மற்றும் சிறந்த கதைக்கான ஃப்லிம்பேர் விருதுகளையும் இப்படம் பெற்றது. இதுதவிர பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இப்படம் திரையிடப்பட்டு பல விருதுகளை வென்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post