
மும்பை: நடிகர் சயிப் அலி கானை கத்தியால் குத்தியவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பாலிவுட் நடிகரான சயிப் அலிகான் (54), மகாராஷ்டிர மாநிலம் மும்பை மேற்கு பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். 11-வது தளத்தில் உள்ள அவரது வீட்டில் கடந்த புதன்கிழமை இரவு மர்ம நபர் ஒருவர் புகுந்து கத்தியால் 6 முறை நடிகர் சயிப் அலி கானை குத்தினார். இதையடுத்து மும்பை லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) வைக்கப்பட்டிருந்தார். அபாய கட்டத்தைத் தாண்டிய நிலையில் நேற்று, அவர் ஐசியு பிரிவிலிருந்து மாற்றப்பட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்