
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. கன்னடம், தமிழ், இந்தி என அனைத்து மொழிகளிலும் இந்த ட்ரெய்லர் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. முதல் பாகம் பெற்ற வெற்றியால் இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் ‘காந்தாரா’ படக்குழு வெளியிட்டதாக ஒரு போஸ்டர் வைரலாகி வருகிறது. அதில், காந்தாரா சங்கல்பம் என்பது ஒரு சுய முன்னெடுப்பு என்றும், அதாவது ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தை பார்ப்பதற்கு பார்வையாளர்கள் மூன்று தெய்வீக செயல்முறைகளை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்