
பெங்களூரு: ‘காந்தாரா சாப்டர் 1’ படத்துக்காக கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனிக்கவில்லை என்று ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரிஷப் ஷெட்டி பேசியதாவது: “படத்தின் சில காட்சிகள் மிகவும் ஆபத்தானவையாக இருந்தன. அந்த நாட்களில், நான் வேண்டுமென்றே என் மனைவி பிரகதியை படப்பிடிப்பு தளத்திற்கு தாமதமாக வரச் சொல்லி ஏமாற்றுவேன். கிட்டத்தட்ட 3,4 முறை மரணத்தின் அருகே சென்றுவந்தேன். தெய்வத்தின் உதவியால் மட்டுமே இன்று உங்கள் முன்னால் நின்றுகொண்டிருக்கிறேன். கடந்த மூன்று மாதங்களாக, நான் சரியாக தூங்கவில்லை. இந்த படத்துக்காக இடைவிடாமல் உழைத்து வருகிறேன்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்