
தனக்கும் அனிருத்துக்கும் இடையில் போட்டி நிலவுவதாக முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பதிலளித்துள்ளார்.
’பல்டி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது “அனிருத்துக்கும் உங்களுக்கும் போட்டி என்று விமர்சிக்கப்படுகிறதே?” என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “அனிருத் நிறைய செய்துவிட்டார். நான் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன். எங்களுக்குள் போட்டி என்றெல்லாம் எதுவும் கிடையாது. உங்கள் அனைவரது ஆசிர்வாதத்துடன் இன்னும் நிறைய கடினமாக உழைக்க விரும்புகிறேன். நான் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும்” என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்