நினைவில் நனைந்து நிற்கும் கீர்த்தனமாய் ‘ராஜா மகளின்’ குரல்! https://ift.tt/1z9TCfv

மணிரத்னம் - இளையராஜா கூட்டணியில் 1990-ல் வெளிவந்த திரைப்படம் அஞ்சலி. குழந்தைகளை மையமாகக் கொண்ட இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களிலும் மழலைப் பட்டாளத்தின் குரல்களை கோரஸாக பயன்படுத்தியிருப்பார் ராஜா. யுவன், கார்த்திக்ராஜா, வெங்கட்பிரபு, பிரேம்ஜி, பவதாரிணி ஆகியோர்தான் அந்த மழலைப்பட்டாள கோரஸ் சிங்கர்ஸ். அஞ்சலி படத்தின் ஆடியோ கேசட் கவரில் பின்னணி பாடியவர்கள் என இந்த பெயர்கள் இருக்கும். அப்படித்தான் அறிமுகமானது 'பவதாரிணி' என்ற பெயர்.

மேலும் அப்போது வெள்ளிக்கிழமைகளில் ஒளிபரப்பான ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியில் பிரபுதேவா நடித்த ராசய்யா படத்தின் பாடல்கள் வரும். அந்தப் படத்தில் இருந்து அதிகமாக ஒளிபரப்பாகும் பாடல்களில் ஒன்று 'காதல் வானிலே', மற்றொரு பாடல் 'மஸ்தானா மஸ்தானா' , ராஜாவின் வெஸ்டர்ன் இசைக்கு ஏற்ப இரண்டு மூன்று மொட்டைத்தலை ஆட்களோடு பிரபுதேவா நடனமாடும் அந்தப்பாடல் அந்த சமயத்தில் மிகவும் பிரபலமானது. ராஜாவின் குழலிசைக் கலைஞர் அருண்மொழியுடன் இணைந்து பவதாரிணி தான் இந்தப் பாடலை பாடியிருப்பார். மழலை மணமாறாத பவதாரிணியின் சன்னமான குரலோசை, அருண்மொழியின் பேஸ் டோனோடு சேர்ந்து பாடலை இனிமையாக்கியிருக்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post